மைத்திரிக்கு எதிராக தாமதமின்றி நடவடிக்கை – பேராயர் வலியுறுத்து

313 0

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றுள்ளதால், தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

ஈஸ்டர் தின வழிபாடுகளுக்குப் பின்னர் இன்று ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதியை எதிர்த்து நடவடிக்கை எடுக்க பல மாதங்கள் ஏன் காத்திருக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது கேள்வியெழுப்பினார்.

ஏனெனில் ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து அவர் முன்னரே எச்சரிக்கையைப் பெற்றிருந்தாலும் அலட்சியம் காரணமாக தாக்குதலைத் தடுக்கவில்லை என்றும் பேராயர் தெரிவித்தார்.

மேலும், சஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்புடைய சிலர் இன்னும் பாராளுமன்றத்தில் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.