மீனவர் பிரச்சினை தொடர்பில் இலங்கை இந்தியா இடையே அமைச்சு மட்ட பேச்சு

423 0

141222141717_tamil_nadu_fishermen_released_by_sri_lanka_512x288_bbc_nocreditஇலங்கை மற்றும் இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இடையிலான பிரச்சினைகள் தொடர்பில், அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த இந்தியாவும் இலங்கையும் இணங்கியுள்ளன.

இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

இதன்போது இந்த பிரச்சினையை விரைவில் தீர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில், இரண்டு நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை நடத்தி, நிரந்தர தீர்வு ஒன்றை காண இணங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.