நீராடும் போது சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! – சாம்பூரில் சம்பவம்!

256 0
15 வயது சிறுவனொருவனை முதலையொன்று இழுத்துச் சென்றுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

சாம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்திகுளம் வாவியில் நேற்று (27) நீராட சென்ற மூன்று சிறுவர்களில் ஒரு சிறுவனே இவ்வாறு முதலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் நிலைய அதிகாரிகள், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, ஹசலக பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நீராட சென்ற 43 வயது தந்தை மற்றும் 13 வயது அவரது மகன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

பின்னர் மகனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தந்தையை தேடி பணி தொடர்ந்தும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.