கொரோனா: எகிறுகிறது தொற்றாளர்கள் எண்ணிக்கை

270 0

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 260 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆயிரத்து 561ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 88 ஆயிரத்து 145 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில்,  தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 858 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய ஆணொருவர் களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 558 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.