மருதானை உணவகத்தில் தீ: ஒருவர் பலி

358 0

மருதானை சங்கராஜ மாவத்தையில் உள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட தீயில், எரிகாயங்களுக்கு உள்ளான மூவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில், கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளான ஒருவர் மரணமடைந்துள்ளார்.

அந்த உணவகத்தில், காஸ் சிலிண்டர் வெடித்தத்தில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.