’உலர் உணவு கிடைக்காவிட்டால் உடன் தொடர்புகொள்ளவும்’

465 0

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில்,  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுய தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருள்கள் கிடைக்காது இருப்பின், உடன் தொடர்புகொள்ளுமாறு, மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில்,  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுய தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் திட்டம், மன்னார் பிரதேச செயலகத்தால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு உலர் உணவு பொருள்கள் கிடைக்காது இருப்பின், அது்தொடர்பில் கிராம அலுவலர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தெரியப்படுத்துமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.

மேலதிக தொடர்புகள் அல்லது முறைப்பாடுகள் இருப்பின் 023-2222238 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக  மன்னார் நகர பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறும், எம்.பிரதீப் தெரிவித்தார்.