ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – கொழும்பு பேராயர்

304 0

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என போராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மத வழிபாடுகளின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று கிட்டதட்ட இரண்டு வருடங்களாகியுள்ள நிலையில், இதுவரையில் எந்தவொரு நபருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.