இன்று காலை ஏற்பட்ட கோர விபத்து! – குடிபோதையால் நேர்ந்த சோகம்!

217 0

இன்று காலை வெள்ளவத்தையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குடிபோதையில் வாகனம் செலுத்தியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதன்படி, இரவு விடுதியொன்றில் மது அருந்திவிட்டு வாகனத்தை செலுத்திய சாரதி உட்பட அதில் பயணித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.