இலங்கையில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

248 0

இலங்கையில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு 82 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 748 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 373 ஆகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை, அவர்களில், இன்னும் நான்காயிரத்து 18 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில்  இதுவரை 464 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.