அமெரிக்கத் தூதுவர்-தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பு

224 0

அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் இன்று காலை யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழிலுள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற இச்சந்திப்பில் வடக்கின் தற்போதைய நிலைமை குறித்துக் கலந்துரையாடப்பட்டது.


தமிழ் தேசிய கூட்டமைப்பு கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வடக்கு மாகாண சபை முன்னாள் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

அமெரிக்கத் தூதுவருடனான இச்சந்திப்பின்போது ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் த.தே.கூட்டமைப்பு சமர்ப்பித்த தீர்மானங்கள், வடக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.