யானை ஒன்றினை கொன்று அதன் தந்தங்களை தம்வசம் வைத்திருந்த இருவரை வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் குறித்து தெரிய வருகையில்,
ஒதியமலை காட்டு பகுதியில் யானை ஒன்று கொலை செய்யப்பட்டு தந்தங்கள் பெறப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து கிளிநொச்சியில் அமைந்துள்ள வடமாகாண பிராந்திய வனஜவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வட்டார அலுவலக வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
இத்தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த யானை தந்தங்களை தம்வசம் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் யானைத் தந்தங்களும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு சோடி யானைத்தந்தம் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்கள தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.