யாழில் பாடசாலை ஆசிரியர் உட்பட 3 பேருக்கு கொரோனா!

216 0

வடக்கு மாகாணத்தில் இன்றைய தினமும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 444 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுக்கூடத்தில் 374 பேருக்கு
மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 2 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.