வடக்கில் நேற்று அறுவருக்கு கொவிட்-19 தொற்று: வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

184 0

வடக்கு மாகாணத்தில் நேற்றும் 6 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது.இவர்களில் ஒருவர் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 377 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 416 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 6 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. 5 பேர் மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட வர்களுடன் தொடர்புடையோர் என்ற அடிப்படையில் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்கள்.

இதேவேளை கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை பணியாளர் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கொரோனாத் தொற்று அறிகுறிகளுடன் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் சேர்க்கப்பட்ட அவருக்கு நேற்று இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.