மட்டு. நாவலடியில் விபத்து! நான்கு பிள்ளைகளின் தந்தை பலி!

214 0

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியின் நாவலடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஏறாவூர் ஜாமியுல் அக்பர் ஜும்மாப் பள்ளி குறுக்கு வீதியைச் சேர்ந்த 62 வயது நான்கு பிள்ளைகளின் தந்தையொருவரே உயிரிழந்தார்.

தான் பயணித்த டிப்பர் ரக வாகனத்தை வீதியின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, அதன் அருகாமையில் நின்றுகொண்டிருந்த போது லொறியொன்று மோதியமையாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தையடுத்து காயமடைந்த அவர், அயலவர்களின் உதவியுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்கையில் உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.