வடக்கிலும் கொரோனா பரவல் அதிகரிப்பு: இன்றுமட்டும் 32 பேருக்கு தொற்று!!

255 0

வடக்கு மாகாணத்தில் இன்று மட்டும் 32 பெருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 728 பேருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, வவுனியா மாவட்டத்தில் 25 பேரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஐவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு மன்னாரில் இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.