யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று!

243 0

யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர்கள் சுயதனிமைப்படுத்தலில் இருந்த அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே குறித்த 5 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.