பருத்தித்துறையைச் சேர்ந்த இருவர் உட்பட 9 பேருக்கு தொற்று உறுதி!

219 0

கொழும்பில் இருந்து பருத்தித்துறைக்கு வந்த இருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

33 வயதுடைய தாயுக்கும், 6 வயதுடைய மகனுக்குமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் பஸ் மூலமே பருத்தித்துறை வந்திருந்தினர் என்றும், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என்றும் தெரியவருகின்றது.

p>அதையடுத்து அந்த பஸ்ஸில் பயணித்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளில் சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று (18) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 10 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கும், வவுனியா மாவட்டத்தில் 5 பேருக்கும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருவருக்கும், யாழ்ப்பாணம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.