பாலமேடு ஜல்லிக்கட்டு பரிசை புறக்கணித்த மாடுபிடி வீரர்

244 0

தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக பாலமேடு ஜல்லிக்கட்டு பரிசை மாடுபிடி வீரர் புறக்கணித்தார்.

மதுரை மாவட்டம் பொதும்பை சேர்ந்தவர் பிரபாகரன் (24) . இவர் தான் கடந்த ஆண்டு நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பெற்று காரை பரிசாக வென்றார்.

இந்த ஆண்டு அவர் 17 மாடுகள் பிடித்து 2-வது இடம் பிடித்தார். அவர் தானும் 18 மாடுகள் பிடித்தாகவும், விழா கமிட்டியினர் இந்த ஆண்டும் எனக்கு கார் பரிசு சென்று விடக்கூடாது என்பதற்காக தேர்வில் முறைகேடு செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.

இவ்வாறு கூறி விட்டு அவர் விழா கமிட்டியினருடன் வாக்குவாதம் செய்து பரிசை வாங்க மறுத்து புறக்கணித்து சென்றார்.

இதைதொடர்ந்து அவரது பரிசான ஒரு பவுன் தங்க காசு விழா கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.