திங்கள் முதல் வடக்கில் சந்தைகள், மண்டபங்களை திறக்க அனுமதி!

270 0

திங்கள் முதல் வடக்கில் வவுனியா தவிர்ந்த மாவட்டங்களில் பொதுச் சந்தைகள் மற்றும் திருமண மண்டபங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மருதனார்மடம் கொத்தணி பரவல் காரணமாக பொதுச் சந்தைகள் மற்றும் திருமண மண்டபங்கள் அனைத்தும் சுகாதார பிரிவினரால் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று (15) வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு வழி காட்டல் கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலும் 150 பேருடன் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி திருமண மண்டபங்களை திறப்பதற்கு அனுமதி அளிப்பட்டுள்ளது.