ஆபத்தான தடுப்பூசியினால் எவ்வித பலனும் இல்லை-வைத்தியர் ஹரித அலுத்கே

194 0

இலங்கைக்கு கொரோனா தடுப்பூசியை எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அதற்காக தொழிநுட்ப குழுவின் ஆலோசனையை பெற வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதாரா அமைப்பு அங்கீகரம் வழங்காத தடுப்பூசியை இலங்கைக்கு எடுத்து வருவதில் எவ்வித பலனும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான தடுப்பூசியை எடுத்து வந்து பலன் இல்லை எனவும் பயன்படுத்து நாட்டில் கூட அனுமதி வழங்கப்படாத தடுப்பூசியினால் எவ்வித பிரயோஜனமும் இல்லை என வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.