நேற்று காலையிலிருந்து யாழ். மாவட்டத்தில் காணப்பட்ட மழையுடன் கூடிய காலநிலையின்காரணமாக தற்போதுவரை 358 குடும்பத்தை சேர்ந்த 1047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என். சூரியராஜ் தெரிவித்தார்.
நேற்று காலை யிலிருந்து யாழ்ப்பாண குடாநாட்டில் பெய்த மழையின் தாக்கத்தின் காரணமாக 57வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
யாழில் 358குடும்பங்களைச் சேர்ந்த 1047பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள தாகவும் யாழ் மாவட்டஅனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும் குறித்த பாதிப்புகள் தொடர்பானவிபரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்தார்.