சிறிலங்காவில் இன்றும் 524 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

228 0

சிறிலங்காவில் இன்று மட்டும் 524 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு 47ஆயிரத்து 305ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை 40 ஆயிரத்து 317 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதுடன் இன்னும், ஆறாயிரத்து 766 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 222 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.