மாகாண சபைகளை மீண்டும் நிலைபெறச்செய்ய வேண்டும் – சு.க.

222 0

மாகாணசபை தேர்தலை நடத்தும் வரை மாகாணசபைகளை மீண்டும் செயற்படுத்தவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்ய தீர்மானித்திருப்பதாக கட்சியின் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நேற்று மாலை கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சி தலைமையகத்தில் கூடியது.

கூட்டம் நிறைவடைந்த பின்னர் அதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.