2 கோடியே 74 இலட்சம் பெறுமதியான மஞ்சள் மற்றும் ஏலக்காய் மீட்பு

248 0

சட்டவிரோதமான முறையில் மஞ்சள் மற்றும் ஏலக்காய் போன்றவற்றைக் கடத்திய நான்கு பேர் நேற்று இராணு வத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சுமார் 2 கோடியே 58இலட்சம் ரூபா பெறு மதியான மஞ்சள் 4300 கிலோ மற்றும் 16 இலட்சம் ரூபா பெறுமதியான ஏலக்காய் 80 கிலோ பொதிகளுடன் மன்னார்-பேசாலை பிரதேசத்தில் வைத்து இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சந்தேகநபர்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள தலைமன்னார் பொலி ஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனமை தெரிய வந்துள்ளது.