கண்டியில் 42 பாடசாலைகள் மீண்டும் இன்று திறப்பு

280 0

கொரோனா தொற்று காரணமாகக் கடந்த வாரம் மூடப் பட்ட கண்டி மாவட்டத்தின் 42 பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளை இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நகரில் அமைந்துள்ள மூன்று பாடசா லைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக மத்திய மா காண ஆளுநர் லலித் யூ. கமகே தெரிவித்தார்.

 

கண்டி மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாகக் கடந்த தினம் கண்டி மாவட்டத்தின் 45 பாடசாலைகளை மூட நட வடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கண்டி பகுதியில் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்த பின்னர் 42 பாடசாலைகளை இன்றைய தினம் திறக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரி வித்தார்.