நாளொன்றில் இயங்கும் 350 ரயில் சேவைகள் ரத்து

6257 0

10-3-720x480-450x300சதர்ன் ரயில் நிலைய ஊழியர்களால் நடத்தப்படும் பணி நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து, புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரயில் நேர அட்டவணையில், நாளொன்றில் இயங்கும் சுமார் 350 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த நேர அட்டவணை, ரயில் நிலைய அமைப்பினால் நடத்தப்பட்ட கூட்டமொன்றின் போதே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் போது கருத்து தெரிவித்த ரயில் நிலைய அமைப்பு “குறித்த நேர அட்டவணை தற்காலிகமானது. ஊழியர்கள் பணிக்கு திரும்பும் வரை மாத்திரமே இந்த நேர அட்டவணை செல்லுபடியாகும்”  என தெரிவித்தது.

ஊழியர்களின் பணி நிறுத்த போராட்டம் மற்றும் அதிகளவான ஊழியர்கள் சுகயீன விடுப்பில் பணிக்கு சமூகமளிக்காமை ஆகிய காரணங்களால், இங்கிலாந்தின் தெற்கு கடற்கரை பகுதிகளில் இருந்து லண்டன் ஊடாக செல்லும் பல ரயில் சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment