அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வர்த்தக நிலையங்களுக்கு செல்லுங்கள்-சுகாதார மேம்பாட்டு பணியகம்

341 0

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வர்த்தக நிலையங்களுக்கு செல்லுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு வைபவங்கள் ஒழுங்கு செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை வர்த்தக நிலையங்களுக்கு வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரம் செல்வது பொருத்தமானதாகும் என்றும் அறிவித்தல் விடுத்துள்ளது.

பொது மக்கள் பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியுமெனவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.