சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது-ஜி.எல்.பீரிஸ்

223 0

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் குழுநிலை விவாத்தத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், புதிய திகதி பரீட்சைக்கு 06 வாரங்களுக்கு முன் அறிவிக்கப்படும் என கூறினார்.

தற்போது நாட்டில் உள்ள நிலைமையில் பரீட்சைகளை நடத்துவது அநீதியான தொன்று என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

க.பொ.த. சாதாரண பரீட்சையை அடுத்த ஆண்டு ஜனவரி 18 முதல் 27 வரை பரீட்சையை நடத்த முன்னர் முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.