காங்கேசன்துறை கடலில் நீராடச் சென்று காணாமல்போன 2ஆவது இளைஞரின் சடலமும் கண்டெடுப்பு

294 0

காங்கேசன்துறை கடலில்  நீராடச் சென்ற இருவர், அலையில் அடித்துச் சென்ற நிலையில் இரண்டாவது நபரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1 மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு பேர், அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

குறித்த சம்பவத்தில் தையிட்டியைச் சேர்ந்த சிவச்சந்திரன் நிரோஜன் (வயது-19), மாசிலாமணி தவச்செல்வம் (வயது -19) என்ற இருவருமே கடலலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களில் சிவச்சந்திரன் நிரோஜன் என்பவரது சடலம் நேற்று மாலை 5 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.  இந்நிலையில் மற்றையவரான மாசிலாமணி தவச்செல்வத்தின் சடலம் இன்று  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரது சடலமும் பிரேத பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.