சிறிலங்காவில் மேலும் 323 பேருக்கு கொரோனா தொற்று!

352 0

சிறிலங்காவில் மேலும் 323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி சிறிலங்காவில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 311 ஆக உயர்ந்துள்ளது.

அதில் 17 ஆயிரத்து 2 பேர் குணமடைந்துள்ளதுடன் 5 ஆயிரத்து 877 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வரும் அதேவேளை 109 பேர் உயிரிழந்துள்ளனர்.