மஹர சிறையில் குழப்பநிலை- கைதியொருவர் உயிரிழப்பு, மூவர் காயம்!

329 0

நீர்கொழும்பு, மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள நிலையில் கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழப்பநிலையைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிக் பிரயோகத்திலேயே கைதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், மேலும் மூவர் காயமடைந்துள்ள நிலையில் நிலைமையக் கட்டுக்குள் கொண்டுவர, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.