பொலிஸ் அதிகாரியை மோதிச் சென்ற டிப்பர் ஓட்டுனர் கைது

285 0

கொபேகனே, ஹாதலாவ பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவரை மோதிச் சென்ற டிப்பர் வாகனத்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதான சந்தேக நபர் இன்று காலை 11.30 மணியளவில் நிகவெரட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த டிப்பர் வாகனம் குளியாப்பிட்டிய பகுதியில் விட்டுச் சென்ற நிலையில் இன்று காலை கைப்பற்றப்பட்டிருந்தது.

நிகவெரடிய, கொபேகனே பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புகளுக்கு இடையில் டிப்பர் வாகனத்தில் வந்த நபரொருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை விபத்துக்குள்ளாக்கி தப்பிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தெதுரு ஓயா ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்வை சுற்றிவளைக்க சென்ற சந்தர்ப்பத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த டிப்பர் வாகனமொன்றை நிறுத்த பொலிஸ் அதிகாரிகள் முயற்சித்த போது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை டிப்பர் வாகனத்தின் சாரதி இவ்வாறு மோதி சென்றுள்ளார்.

இதன்போது கொபேகனே பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் 32 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளார்.