யேர்மனி பிறீமகாபன் நகரில் இடம்பெற்ற மாவீரர் நாள் 2020

1352 0

யேர்மனியில் பிறீமகாபன் நகரத்தில் தேசிய மாவீரர் நாள் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக மிகச்சிறப்பாக நினைவுகூரப்பட்டது. ஐந்து மக்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட்ட மண்டபத்திற்குள் பணியாளர்களின் ஒருங்கமைப்பில் வருகைதந்த மக்கள் அனைவரும் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவ வளிசமைத்துக் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு நகரமக்களுக்கும் குறிப்பிட்ட நேரம் கொடுக்கப்பட்டு மண்டபத்திற்குள் அனுமதித்தபோதும் வருகைதந்த மக்கள் நீண்ட நேரம் தமது வாகனத்ததிற்குள் காத்திருந்து மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்திய காட்சி அம்மக்களின் உணர்வலைகளைக் காட்டி நின்றது.