நீலகிரியில் 2 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை

229 0

நீலகிரியில் இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 7 ஆயிரத்து 350 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீலகிரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளால் பாதிப்பு குறைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக 20-க்கும் கீழ் தினமும் கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. அரசு தெரிவித்த வழிமுறைகளின்படி சிகிச்சை அளிக்கப்படுவதால் இதுவரை 7 ஆயிரத்து 154 பேர் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த சுற்றுலா பயணிகள், பூங்கா பணியாளர்கள், வியாபாரிகள், தங்கும் விடுதி ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரியில் இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.