யேர்மனி டுசில்டோர்ப் நகரமத்தியில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020

2112 0

யேர்மனி டுசில்டோர்ப் நகரத்தில் மாவீரர் நாள் 2020 மிகச் சிறப்பாக நடைபெற்றது. மண்டபத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த மாவீரர் நாள் நிகழ்வுக்கு கொரோனா விதிமுறைகள் இடையூறுகளை ஏற்படுத்தியபோது பணியாளர்களின் துரிதமான செயற்பாட்டால் இந்த நிகழ்வு டுசில்டோர்ப்பில் அமைந்துள்ள நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஒழுங்கமைக்கப்பட்டது.

27.11.2020 வெள்ளிக்கிழமை காலை பத்துமணிக்கு திடலுக்குள் உள் நுளையும் அனுமதியைத்தான் எமக்கு அளித்திருந்தார்கள். இருந்த இரண்டு மணித்தியாலங்களுக்குள் மிக வேகமாக மக்களும் செயற்பாட்டாளர்களும் துரிதமாகச் செயற்பட்டுத் திடலை மாவீரர் துயிலும் இல்லக் காட்சிக்கு கொண்டுவந்தனர். குளிரும் குளிர்காற்றும் சற்று அதிகமாக இருந்தபோதிலும் மாவீரர்களின் அருள் அத்திடலை நிறைத்திருந்தது.

கடுமையான குளிரிலும் கொரோனா விதிமுறைகளுக்ககு ஏற்றாற்போல் திடலை நிறைத்திருந்த மக்கள் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றும்வரை அசையாது நின்றமை வியக்கவைத்த காட்சியாக இருந்தது. இத்திடலில் இருந்துதான் யேர்மனியில் நடைபெற்ற ஆறு மாவீரர் நாள் இடங்களையும் ஒருங்கிணைத்து வீடுகளில் இருந்து மாவீரர்களை வணங்கிய மக்களுக்கு நேரஞ்சல் செய்யப்பட்டது.