600 கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கத் தீர்மானம்

373 0

சிறைச்சாலைகளுக்குள் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்காக 600 கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் கொவிட்-19 தொற்றாளர்கள் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடுமையான குற்றங்களைச் செய்த கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது.

இதேவேளை ஜனாதிபதி மன்னிப்புக்கு பரிசீலிக்கக்கூடிய கைதிகளின் பட்டியலை அனுப்புமாறு சிறைச்சாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.