சவுதி செல்லும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

277 0

கொரோனா தொற்றால் இடைநிறுத்தப்பட்டிருந்த, இலங்கையிலிருந்து சவுதி அரேபியாவுக்கு ஆண் பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று இரவு 60 பணியாளர்கள் இலங்கையிலிருந்து சவுதி அரேபியாவுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதற்கட்டமாக 180 ஆண்கள் செல்லவுள்ளதுடன், இவர்கள் ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றவுள்ளனர்.