ஈழத்தில் மாவீரம்-தாயகத்திலிருந்து கனி.

575 0
ஈழத்தில் மாவீரம்
 வீரம் என்பது , மண்ணில் உயிரிகள் எல்லாவற்றுக்கும் உள்ள பொதுவான ஆற்றல் என்பதை நாம் அறிவோம். மாவீரம் என்பது , சிறப்பான உன்னதமான ஒரு ஆற்றல் என்பதையும் புரிந்துகொள்ள முடியும் அத்தகைய ஒரு மாவீரத்தை இந்த மண்ணில் நிரூபிக்கிற ஏதோ ஒரு சந்தர்ப்பம் இப்புவியில் , ஒவ்வொரு உயிருக்கும் அதனது ஆயட்காலத்தில் அதற்கு அமைந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
அது போன்ற நிலை மனிதர்கட்கும் உண்டு. இந்த வகையில் மனிதகுலத்தின் சுதந்திரத்திற்கான வீரஞ்செறிந்த போராட்டம் என்பது இங்கே தனித்துவம் வாய்ந்ததாகிறது . ஒடுக்கப்பட்ட இனங்கள் தமது விடுதலைக்காக போராடிய நிகழ்வுகள் , வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தொடர்வன. தமிழர்களது தொன்ம வரலாற்றில் வீரம் என்று எண்ணுகிறபொழுது இராவணரது வீரம் , சேர , சோழ , பாண்டியரது வீரம் எம் நினைவுக்கு வரும். பெண்கள் என்று பார்க்கிறபொழுது ஆனையை அடக்கிய அரியாத்தா . வேலுநாச்சியாரும் அவருக்கு துணையாக நின்ற தற்கொடைப்பெண் குயிலியும் நினைவுக்கு வருவர் . இதுபோல அண்மைக்கால வரலாற்றை எண்ணுகையில் எம்மாவீரர்களது வீரம் அல்லாது வேறெது நினைவில் வரும்.
எம் தாய் தேசத்தின் சுதந்திர மலர்வுக்காய் தம் உயிர்களை துச்சமாக மதித்தனர் ஈழத்தாயின் புதல்வர்கள் , புதல்விகள் வீரம் என்ற தமது ஆற்றலை நிரூபிக்கும் களப்பயணத்தில் பல்வேறுவிதமான சாதனைகளைப் புரிந்தனர் . பலர் தமது இறுதி நாளைத் தெரிந்துகொண்டு களம் நோக்கிச் சென்றனர். வேறுசிலர் தமது முகத்தைக் காண்பிக்கவில்லை. இன்னும் சிலர் தமது பெயர்களைக்கூட தெரிவிக்கவில்லை . ஆனால் , தமது ஆற்றலை நிருபித்தனர். களத்தில். இத்தகைய எல்லாவீரமும் ஈழத் தமிழரின் சுதந்திரப்போராட்டக் களத்தை , ஏவுகணை வேகத்தில் உலக அரங்கின் உச்சியில் கொண்டு சென்று வெளிச்சமிட்டது . இவ்வாறான ஒரு களப்பயணத்தை தொடங்கி அதனை வழிநடத்தி , இயக்கி தலைமை வகித்துக்கொண்டவர் எத்தகைய சிறப்பான ஆற்றல்களுக்கும் ஆளுமைக்கும் உரித்துடையவராக இருந்திருக்க முடியும் என்பதை புரிந்து கொள்வதற்கு யோசிக்கவேண்டிய அவசியமில்லை .
மேற்படி பேராற்றல் கொண்ட இளைஞர் இயக்கம் . கிழக்கு மாகாணத்தில் மாவிலாற்றுச் சிக்கல் ஆரம்பிப்பதற்கு முன்னான காலப்பகுதியில் தமிழர் தாயகப்பகுதியின் 70 சதவீத நிலப்பரப்பை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தது என்பதை இவ்விடத்தில் நாம் நினைவிற்கொள்ளவேண்டும் மேலும் கூறப்போனால் , சமாதானப் பேச்சுக்கள் நடக்கும் போது ஈழத்தமிழருடைய இந்த பேரியக்கமான தமிழ்தேசிய இயக்கமான த.வி.பு இயக்கம் வலுவான நிலையிலேயே இருந்தது என்பதற்கு மேற்படி கூற்று சான்று.
ஆம் , உலகெங்கிலும் வாழும் தமிழ்மக்களது மன ஆவேசமும் , பொருளாதாரப் பங்களிப்பும் தாயகத்தின் சுயசார்பும் , எளிமையான வாழ்வும் , இளைஞரது ஆற்றலும் ஈகமும் , தாங்கொணா துன்பத்தையெல்லாம் தாங்க தயாரான சகிப்புத்தன்மையும் -இவ்விடத்தில் இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட ‘சூரியக்கதிர்’ நடவடிக்கையின்போது , யாழ் மக்கள் மேற்கொண்ட வன்னிமண் நோக்கிய பயணம் மனங்கொள்ளத்தக்கது- ஆகிய எல்லா விதமான ஆற்றல்களையும் வெளிப்படுத்தி ஒரு இனம் தனது விடுதலைக்காக ஆற்றக்கூடிய அனைத்தையும் ஆற்றினார்கள் . ஆனாலும் அதற்கு மேலும் நாம் விலை கொடுக்கவேண்டியதாயிற்று . அதுதான் வன்னிமண்ணில்  இறுதிப்போரின்போது நிகழ்ந்தது . முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது இச்சமயத்தில் எம்மவர் , கொடுத்தது உபரி ( மிகைஇழப்பு ) ஒரு விடுதலை இயக்கம் , விடுதலைக்காகப் போராடும் ஒரு இனம் கொடுக்க வேண்டியதிலும், இழக்கவேண்டியதிலும் அதிகம்
ஆம் , சின்னஞ்சிறு பாலகர்கள் , கர்ப்பிணிப்பெண்கள் , தள்ளாடும் வயதில் இந்த நாட்டிற்காய் உழைத்து ஓடாகி ஓய்ந்திருந்தவர்கள் , தாய்மண்ணில் உற்சாகம் புரள ஓடியாடி விளையாடிக்கொண்டு தமது விழிகளில் கனவுகளைச் சுமந்து துள்ளித்திரிந்த பள்ளிப்பருவத்தினர், எல்லோரும் எந்தப் பாகுபாடுமின்றி தங்கள் இரத்தத்தையும் சதையையும் கொட்டிக்கொடுத்தார்கள் தாயின் மடியில். தங்கள் ஆவி துடிக்கத் தலை சாய்த்தார்கள் அன்னை மண்ணின் காலடியில் . இது உபரி . இது ஒரு தேசத்தின் விடுதலைக்காய் கொடுக்கவேண்டிய விலையிலும் அதிகம் . உற்பத்தியில் உபரி பார்த்த, இலாபத்தில் உபரி பார்த்த, சுகபோகத்தில் உபரி பார்த்த, ஏமாற்று , தந்திரம் . அதர்மம் ஆகியவற்றைக் கைங்கரியமாகக் கொண்டு உடலை வளைக்காது உலக வளங்களை ஏப்பம்விடும் அந்த உபரி பிரியர்கள், எங்கள் மண்ணில் ஏற்படுத்திய அழிவுகளும் அட்டுமியங்களும்கூட உபரிதான்.
உண்மையில் இந்த அழிவுகளை நேரடியாக எம்மண்ணில் இறங்கி செயற்படுத்திய படையாட்கள் இனவாத , மதவாத அரசிடம் கூலிவாங்கும் அடிமைகள்தான் . இந்த இனவாத அரச தலைவர்களும்கூட உலகமக்களின் பொது எதிரிகளான மூலதன ஆதிக்க , சந்தை ஆதிக்க கும்பலின் அடிவருடும் பொம்மைகள்தான் . கட்சி அரசியல் நடத்தி ஊழல்மோசடி செய்து மக்களின் பணத்தை மக்களுக்கு சேரவிடமால் , தமது குடும்பச்சொத்துகளாகத் திரட்டிக்கொள்ளும் திருடர்கள். தாய்நாட்டின் வளங்கள் முழுவதையும் மூலதன ஆதிக்கக் கும்பலுக்கு விலைபேசுவது , அந்த வியாபாரத்தில் மோசடி செய்து தமக்கான பணத்தைச் சுருட்டிக் கொள்வது, வெறும் கண்துடைப்புக்கு மக்களின் போக்குவரத்து சௌகரியத்துக்காக ரோடு போடுவதாக காண்பிப்பது, அந்த ரோடு மூலம் சந்தை ஆதிக்கக் கும்பலின் அடிமைகளை மக்களின் வீட்டுக்குள் அனுப்புவது, ஆயினும் பசியோடு இருக்கும் மக்களுக்கு உணவுதானே தேவை . ஆனால், இங்கோ தினமும் ஒரு பொருளைக் காவிக்கொண்டு ” அம்மா ” “ அக்கா ” என்று அழைத்துக்கொண்டு இளைஞர் , யுவதிகள் வருவார்கள். கையில் பிளாஸ்டிக் புதுமைகளுடன் அதன் நுட்பங்களை வேறு தொண்டைத்தண்ணி வற்ற விளக்கிக்கொண்டு நிற்பார்கள். இந்த பிளாஸ்டிக்குகளையா மக்கள் சாப்பிட முடியும்.
விவசாயம், பாதி உயிரில் துடித்துக்கொண்டிருக்கிறது . பனை மரங்களுக்கு அடியில் மக்கள் போவதேயில்லை . கள்ளிறக்குவதற்காக மட்டும், எண்ணி ஒருசிலர் மரத்தடிக்குச் செல்கிறார்கள். விவசாய நிலங்களின் மீது கடைகளும் கல்யாண மண்டபங்களும் தெருவுக்குத் தெரு முளைத்திருக்கிறது . இதையா கேட்டோம் . இப்படியே கட்சி அரசியலில் ஊழல் செய்த்து பணம் திரட்டும் பிழைப்பை நம்பித்தான் அரசாங்கத்தை இயக்குகிறார்கள். வாக்குகள் பெறுவதற்காக மட்டும் மக்களிடம் வருகிறார்கள். இத்தகைய சீர்கெட்ட பொம்மை அரசியலை மக்கள் விளங்கிக் கொள்வதாக இல்லை . மக்களை விழிப்படையாமல் , தெளிவடையாமல் மயக்க நிலைக்குள் வைத்திருப்பதற்காகத்தானே ஊடகங்களின் வண்ணத்திரை, சின்னத்திரை, சர்வதேச வலைத்தளம் . சமூகவலைத்தளங்கள் என பலவண்ண மாயத்திரைகள். கண்களினூடு மூளைக்குள் நுழைந்து மயக்க ஊசிமருந்து மாதிரி செயற்படுகின்றன. இவையெல்லாம் திட்டமிட்ட வகையில் தம்மீது ஏவப்பட்டுள்ள பண்பாட்டுச் சிதைப்பு விசவாயு எறிகணைகள் என்பதை மக்கள் புரிந்துகொள்வதாக இல்லை . ஊடகங்களை மக்கள் நலப்பணிகளுக்கு ஏற்றவையாக மாற்றியமைக்கவும் இங்கு யாரும் இல்லை. மக்கள் தமக்குள் கூறுபடுகிறார்கள். அதற்கான போட்டி மனப்பான்மை அவர்களிடம் விதைக்கப்பட்டுவருகிறது . “ எங்கே செல்கிறோம் நாம் ” என்ற கேள்வி மக்கள் மனதில் எழும்வரை விடிவுக்கான புதியபாதை திறக்கப்படுவது என்பது மேற்கில் சூரியோதயம்தான்.
உலக சரித்திரத்தில் எமக்குப் பாடம் புகட்டும் பல உண்மைகள் உள்ளன. அவற்றில் ஒன்று , தமது தாய்தேசத்துக்கு இடர் வந்தபோதெல்லாம் எதிர்த்து நின்று போராடாமல் புறமுதுகிட்டு ஓடிச்சென்று , வேற்றினத்தவர்களின் தேசத்தில் சென்று வாழ்ந்த யூத இனத்தவரின் கதை. இன்று இஸ்ரேல் என்று கூறப்படுகிற நாட்டில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யூத இனத்தவரும் . இஸ்லாமிய இனத்தவரும் வாழ்ந்துவந்தனர் . யூதர்கள் தமக்குத்தாமே விதைத்துக்கொண்ட வினையாலும் , வேறு பொருளாதாரக் காரணங்களாலும் , உலகின் பலபாகங்களிலிருந்தும் இவர்களது நாட்டின் மீது போர் தொடுக்கப்பட்டது. இவற்றுள் பலதடவைகள் நடந்த சிலுவைப்போர்களும் அடங்கும் ( யேசுகிறிஸ்து பெத்தலகேமில் பிறந்தார் . இங்கேதான் தனது போதனைகளை மேற்கொண்டார் . இங்கேதான சிலுவைமீதும் அறையப்பட்டார் என்பதும் பலரும் அறிந்தவிடயம் ) இவர்களது இந்த இஸ்ரேல் நாட்டின் மீது போர்கள் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு தடவையும் இவர்கள் நாட்டைவிட்டு ஓடிச்சென்று வேறுநாடுகளில் தஞ்சம்புதந்திருந்தனர். எதிர்த்து நின்று தாய்தேசத்திற்காக போராடவில்லை என்று இந்நாட்டின் வரலாற்றுப் புத்தகங்கள் கூறுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் யூதர்கள் தமது புத்திசாலித்தனத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்ததால் இப்படி நடந்திருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் இவர்கள் நாடோடிகளாகச் சென்று தாம் வாழ்ந்த நாடுகளில் எல்லாம் தமது புத்திசாதுரியத்தினால் . பணக்காரர்களாக வாழ்ந்தார்கள் . என்று தெரியவருகிறது. இருந்தாலும் ஒரு இனம் தான்னை இந்த உலகத்தில் நிலைநிறுத்கிக்கொள்வதற்கு பணம் மட்டும் போதாது . தாய் தேசம் தாய்நாடு வேண்டும் என்ற உண்மையை அவர்களுக்கு இரண்டாம் உலகயுத்தம் புரிய வைத்தது. அதன்பிறகு அவர்கள் தமது நிலத்தை சிறிது சிறிதாக பணம் கொடுத்து வங்கினார்கள் , போர்புரிந்து தமது நிலத்தைக் காப்பாறி அங்கு வாழ்ந்துவந்த இஸ்லாமியர்களை எமாறியும் வாங்கிக்கொண்டார்கள் என்பது வரலாறு. ஈழத்தமிழர்கள் இன்னும் அந்த நிலைக்குப் போகவில்லை . அத்தகைய நிலையொன்று வராமல் இன்றுவரை தமிழீழத்தில் விளைந்த மாவீரம் காத்து நிற்கிறது என்பதுதான் உண்மை
எமது நிலத்தில் விழுதெறிந்து கிளைபரப்பி நின்ற ஈகப்பெருமரத்தின் வேரைக்கிளறி . இலங்கைப்படையினரின் முகாங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. எம்மக்கள் தமது உயிரையும் உடலையும் உரமாக்கி தற்காத்த எமது நிலங்களைக் கீறி இன்று பேரினவாத தொல்லியல் ஆய்வுக் கூடாரங்கள் முளைக்கின்றன . அபிவிருத்தி என்ற பெயரில் சிங்களக்குடிகளின் ஆக்கிரமிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன . இது அரச பேரினவாதம். இன்று அரசற்றவர்களாக இருக்கும் எம்மினத்தை எதிர்காலத்தில் முற்றுமுழுதாக நாடற்றவர்களாக்கும் திட்டத்தின் ஆரம்பபடியாகவும் இருக்கலாம் . ஏனெனில் இன்று அரசாங்கத்தின் அநீதிகளை எதிர்ப்பதற்கு யாரும் முன்வருவதில்லை . காணாமலாக்கப்பட்டவர் நாளிலும் மாவீரர்களை நினைவேற்றும் நாட்களில் ஏற்படுத்தப்படும் தடங்கல்களின்போது மட்டுமே நாம் எதிர்ப்பைக்காட்டுகிறோம். ஏனைய ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பது பற்றி கவலை கொண்டவர்களாக நாம் காணப்படவில்லை. நாம் விழித்துக்கொள்ளவேண்டியது மிக அவசியம் . இவ்விடத்தில் தியாகி திலீபனின் அரசியல் பணிகளை நினைவில் கொள்வதுடன் ஒரு இக்கட்டான சூழலில் போராட்டவடிவத்தை மாற்றி மக்களை விழிப்படையச் செய்து , தன்னையே அர்ப்பணித்து புதுப்பாதை காட்டிய புத்திபூர்வமான அவரது முன்னெடுப்பு எக்காலத்துக்கும் பொருத்தமுடையது என்பதைப் புரிந்து செயற்படவேண்டும் .
உலகநாடுகளின் அரசியல் நிலைப்பாடுகள் காலத்துக்குக் காலம் மாறுகின்றன என்பதை நாம் யாவரும் அறிவோம் . உலகத்தின் பணபலத்தை , குறித்த சில குடும்பப் பாரம்பரியத்துக்குள் முடக்கிக் கொள்ளும் ஒரு கும்பலைப் பற்றி பலரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம் . எந்த இனத்தவர் , தமது புத்தியை நம்பி நாட்டுக்காக உயிரைக்கொடுக்கத் தயங்கினரோ . எந்தக்கும்பல் தமது நாட்டை காசு கொடுத்தும் அருகில் இருந்த ஏனைய இனத்தவரை ஏமாற்றியும் குறைந்த பணத்தைக்கொடுத்து தமது நிலத்தை மீட்டுக்கொண்டார்களோ அந்த இனத்தைச் சேர்ந்த கும்பலே இன்று உலகத்தை விலைக்கு வாங்கும் திட்டத்தில் – வியாபாரத்தத்துவத்தில் , மனச்சாட்சியற்ற வாழ்க்கைத் தத்துவத்தில் வித்தை புரிபவர்களாக . பொருளாதார விதிகளை இயக்கிக்கொண்டிருக்கிறார்கள் . இவர்களே மேற்சொல்லப்பட்ட மூலதன ஆதிக்கநாயகர்களைக் கொண்ட இனம் .
எமது தாய்நிலத்திற்கான போராட்டத்தை பயங்கரவாதம் என்றும் , போராடும் தலைமையும் போராளிகளும் பயங்கரவாதிகள் என்றும் உலக அரசுகள் முத்திரரை குத்தக் காரணமானவர்கள், எமது போராட்டத்தை வேவுபார்ப்பதற்கு தம்நாட்டு வேவுப்படையை இலங்கை இனவாத அரசுக்கு உதவியவர்களும் இவர்களே. இறுதிப்போரில் நேரடியாக நின்று இலங்கை இனவாதப் படைகளுக்கு திட்டங்கள் வகுத்து களத்தில் நின்று உதவியவர்கள் என்பதும் , ஆயுதப்போர் முடிவுக்குவந்த பிற்காலத்தில் கசிந்த தகவல்கள். அன்றும் இன்றும்கூட இந்திய ஆட்சியாளரின் பின்னால் உள்ள பொருளாதாரபலமும் இந்த இனத்தவர்களதே . இதனால் , இந்த மூலதன ஆதிக்கக் கும்பலின் உதவியினாலேயே தமிழீழத்தின் ஆயுதப்போராட்டம் ஓய்வு நிலை எய்தியது என்பது பல நேர்மையான அரசியல் ஆய்வாளர்களது கருத்து.
வியர்வை சிந்தி உழைக்காமல் தமது புத்தியால் பலவிதமான கம்பனிச்சட்டங்கள் , பங்கு சந்தையில் பங்குகளைய் கைப்பற்றும் மர்மவிதிகள் , இயற்ககைச் சூழலை மாசடையச்செய்து உயிர்களின் நிலவுகைக்கும் , உயிர்களின் பல்வகைமைக்கும் அச்சுறுத்தலைத் தரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களை மந்தைகளாக்கி மேய்ப்பதற்கு முயன்றுகொண்டிருப்பவர்களும் – உலகப்பணத்தை தமது குறுகிய வட்டத்துக்குள் தேக்கிக்கொள்ளுபவர்களும் , சுருட்டிக்கொள்ளுபவர்களுமான இந்த கும்பல் , இன்று சீனாவும் இதேபாதையில் மனச்சாட்சியற்ற தத்துவத்தில் முன்னேறுகிறபோது , உலகப்பொருளாதாரத்தின் பெரும்பகுதியை சீனா தனதாக்கிக்கொள்ள முனைகிறபொழுது , இவர்கள் , தாம் சீனாவை எதிர்க்கும் பலவழிகளில் பின்வரும் விடயத்தையும் ஒரு வழியாக மேற்கொள்கின்றனர் . அதாவது சீனாவின் பொம்மை அரசாங்கமான இலங்கையின் குடும்ப ஆட்சியாளருக்கு சவால் விடும் நாடகத்தை அரங்கேற்றத் தலைப்படுகிறார்கள் . அதனூடு சீன அரசுக்கு இடைஞ்சல்களைக் கொடுக்க முற்படுகிறார்கள் இதற்கான சான்றுகளாக , அண்மையில் நிகழ்ந்த –  இலங்கைக்கு அமெரிக்க இராஜாங்க அமைச்சரின் வருகையும் அவரது கூற்றுக்களும் அமைந்திருந்தன. அமெரிக்க அரசாங்கம் என்பது ஒரு வல்லாதிக்க பலம் கொண்ட பொம்மை அரசு என்பதை நாம் இங்கு நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும் ) அடுத்து பேசப்படும் இன்னொரு விடயம் , முன்னைநாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எழுதிய புத்தகமொன்றிலிருந்து ஊடகங்கள் எடுத்தாளும் விடயம்- இலங்கையில் 2009 இல் நடந்தது “ இனப்படுகொலை ” என்ற தனது கருத்தை அவர் அதில் பதிவு செய்துள்ளார் என்பதாகும் .
இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் சம்பவம் நிகழுகையில்ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதிவியேற்றுவிட்டார் என்பது இங்கு நினைத்துப்பார்க்கவேண்டியது . அத்துடன் இவர் அடுத்த தடவையும் ஜனாதிபதியாக வெற்றியீட்டியிருந்தார். எமது மண்ணில் ஆயுதப்போராட்டம் ஓய்வுக்கு வந்தபோதும் அதன்பின்னாலுமாக இவர் , எட்டாண்டுகள் உலகத்தின் முக்கியமான ஒரு தலைவராக பதவியில் இருந்தார் . அந்த காலப்பகுதிக்குரிய 2920 இற்கு மேற்பட்ட நாட்களில் ஒருநாள் கூட ஓபாமாவிற்கு ஈழத்தமிழர் பற்றி சிந்திக்கப்பார்க்க நேரம் இருக்கவில்லையா ? அல்லது இக்கருத்தை ஐக்கியநாடுகள் சபையில் சொல்வதற்கு அவருக்கு நேரம் இருக்கவில்லையா ? உண்மையில் அன்று அவருக்கு அக்கருத்தை வெளியிடும் தேவை இருக்கவில்லை. இன்று மீண்டும் இலங்கை இனப்பிரச்சினையை கையிலெடுத்து சீனாவைச் சீண்டிப்பார்க்கும் தேவை அவருக்கு ஏற்பட்டுள்ளது . ஏனெனில் அமெரிக்காவில் இப்பொழுது ஆட்சியிலிருப்பது அவர் சார்ந்த கட்சி . மீண்டும் ஒருமுறை அமெரிக்க அதிபராவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்தக் கருத்துப் பதிவு அவருக்கு அல்லது அவரது கட்சிக்கு அமெரிக்காவில் ஆதரவுத்தளத்தை உருவாக்கலாம் . பதவியில் இருந்தபோது எம்மக்களுக்கு நிகழ்ந்த படுகொலையை தடுக்க முடியாதவர் , அல்லது அதன் பிறகாவது தனது பதவிக்காலத்தில் இது இனப்படுகொலை என்ற தகவலை உலகின் முன்னால் கூறமுடியாதிருந்தவர் , பதவியில் இல்லாதபோது , வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கு எவ்வளவு பெறுமதி வந்துவிடப்போகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் .
இந்த வகையில் உலகத்தின் ஒரு குறித்த மூலதனவாதிக்கக் குழுமத்தின் சகித்துக்கொள்ளமுடியாத விந்தைளாக பின்வருவன காணப்படுகின்றன. இயந்திரங்களின் உதவியுடன் இரசாயனக் கலப்பூட்டப்பட்ட மிகை உற்பத்திகளைச் செய்து , சிறுவிவசாயிகளை மரணவாயிலுக்குத் தள்ளுதல் , குடிசைக்கைத் தொழில்களைச் சிதைத்து ஏழைமக்களின் வயிற்றில் அடித்தல் , ஆடம்பரப்பொருட்களின் மிகையற்பத்தி மூலம் , மக்கள் மத்தியில் தீவிர நுகர்வுக்கலாச்சாரத்தை ஊக்குவித்து அவர்களிடம் சுரண்டுதல், போட்டிமனப்பான்மையைத் தூண்டி , கடன்களை வழங்கி மக்களை தமது வலையில் வீழ்த்துவது . மக்கள் குடிகளின் சுயசார்பு வாழ்க்கைமுறையையும் தனித்துவமான வாழ்க்கைமுறையையும் சிதைத்து ஓரேவிதமான வாழ்க்கைமுறைக்கு மக்களை இட்டுச்சென்று மனச்சோர்வுக்கும் கடன் சுமைக்கும் ஆளாக்குவது , இளைஞர் உலகத்தை போதையில் நீந்தவைப்பது , தமது இலாபம் , சுகபோகம் , அந்தஸ்தை உயர்த்திக்கொள்வது போன்ற நோக்கங்களுக்காக இளையவரது கல்வியை அவர்களுக்குச் சுமையாக்கியது போன்றவைகள் அத்தகைய விந்தைகளாக அமைகின்றன .
அத்தோடு வாழ்க்கைச்செலவை ஈடுசெய்ய முடியாத மக்கள் உற்சாகமின்றி மன அழுத்தத்தாலும் , மனவிரக்தியாலும் உடல் உழைப்பின்மை யாலும் சிறுநீரகநோய் , புற்றுநோய் , இதயநோய் என்பவற்றுக்கு ஆளாகுவதும் கண்கூடு. இவை மருத்துவ உலகம் சொல்லும் உண்மையும்கூட. இதுமட்டுமல்ல இந்நோயாளிகளை ஆங்கில மருந்துகளுக்கு அடிமையாக்கி மருந்து விற்பனையில் கொடிகட்டிப்பறக்கும் பணம்பார்க்கும் கும்பலும் மேலே சொல்ப்பட்ட புத்திசாலிக் கும்பல்தான். மேற்படி விடயங்களில் இருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடியது , எமது தாய்தேசத்தின் மாவீரம் போராடியது . தனியே சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்த்து அல்ல- உலகமக்களை அமைதியாக , சுதந்திரமாக வாழவிடாது மக்களினங்களை கசக்கிப் பிழிந்துகொண்டிருக்கும் – தம்மை அதிமேதாவிகள் என தமக்குத் தாமே பட்டஞ்சூட்டிக்கொண்டு , இவ்வுலகை தாமே தம் முதுகில் சுமப்பதாக பூச்சாண்டி காட்டும் – உலக வளங்களையெல்லாம் அழிக்கமுடியாத குப்பைகளாகவும் மாசுகளாகவும் மாற்றி பூமித்தாயின் உயிர்ப்பெருக்கத்தின் , உயிர்ப்பல்வகைமையின் இயற்கையின் இயக்கச் சூத்திரங்களை மதியாது அதற்கு முரணாகச் செயற்படும் . மனிதகுலத்தின் , உலகமக்களின் பொது எதிரியான மூலதன ஆதிக்கர்களுக்கு எதிராகவே என்பதை பெருமையோடு நாம் நினைவு கொள்ள முடியும் . மக்களினத்தை இயற்கையையோடு இணையவிடாது தடுத்து , தனது செயற்கை உருவாக்கங்களுடன் இறக்கி விலங்கிட்டு , தனது மூலதன ஆதிக்கத்தின் நவீன அடிமைகளாக உலகமக்களை ஏய்த்துக்கொண்டிருக்கும் . உலக அரசாங்கங்களை தமது ஆதிக்கத்தின் கீழுள்ள பொம்மையாக தனது காலடிகளின் கீழ் நசுக்கிக்கொண்டிருக்கும் – ஒரு பணபலம் பொருந்திய உலகமக்களின் பொது எதிரியான மூலதன ஆதித்தக் கும்பலுக்கு எதிராகவே தமழிழத்தின் வீரமறவர்களின் வீரஞ்செற்றிந்த போர் நிகழ்த்தப்பட்டது என்பதை ஒருபோதும் நினைவிருத்த நாம் மறந்து விடக்கூடாது .
இவ்வாறு நாம் மட்டுமல்ல உலகில் வேறும்பல அரசற்ற தேசிய இனங்களும் நாடற்வர்களுங்கூட இந்த மூலதனவாதிக்கக் கும்பலுக்கெதிராகப் போராடினார்கள் , போராடிக்கொண்டிருக்கிறார்கள் . தமிழினம் நாடற்றவர்கள் அல்ல அரசை இழந்தவர்கள் . குமரியும் ஈழமும் பாரதமும் தமிழினத்தின் பாரம்பரிய பூமி.
 தமிழீழ மாவீரர்கள் இந்த நவதாராளவாத ஏகாதிபத்தியக் கும்பலின் அடிவருடிகளான பொம்மைத் தலைமைகளிடம் மண்டியிடவில்லை. மாறாக எம் அன்னை தேசத்தின் அன்புப் பாதங்களை இறுகக் கட்டியணைத்து முத்தமிட்டவாறே… வலி நிறைந்த தம் இறுதிக்கணங்களைக் கடந்தார்கள். மாவீரம் படைத்தார்கள்.
தாயகத்திலிருந்து கனி.