ஊடகவியலாளர் சந்திரமதியின் இறுதிக்கிரியைகள் இன்று

294 0

திடீர் சுகயீனம் காரணமாக உயிர்நீத்த ஊடகவியலாளர் சந்திரமதி குழந்தைவேலின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.

அவரது சொந்த ஊரான கண்டி – கந்தகட்டி பகுதியில் இன்று பிற்பகல் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சந்திரமதியின் பூதவுடல் கொழும்பு – புஞ்சி பொரள்ளையிலுள்ள லங்கா மலர்ச் சாலையில், மக்கள் அஞ்சலிக்காக நேற்றிரவு வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இன்று காலை அவரது சொந்த ஊருக்கு பூதவுடல் கொண்டு சென்று, அங்கு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதுடன், மாலை இறுதிக் கிரியைகள் நடத்தப்படவுள்ளன.

‘தினக்குரல்’ பத்திரிகையூடாக தனது ஊடகப் பணியை ஆரம்பித்த சந்திரமதி, ஞாயிறு தினக்குரலில் உதவி ஆசிரியராக இரண்டு வருடங்கள் பணியாற்றினார். அதன் பின்னர் ‘சக்தி’ தொலைக்காட்சியில் இணைந்து கடந்த 4 வருட காலமாக கடமையாற்றிவருகின்றார்.

கொழும்பிலுள்ள அவரது வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு அவர் காலமானார். திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையிலேயே அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது.