ஸ்பூட்னிக் தடுப்பு மருந்தை பிற நாடுகளுக்கு வழங்க தயாராகவுள்ளோம் – ரஷ்ய ஜனாதிபதி புடின்

288 0

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தான Sputnik V யை பிற நாடுகளுக்கு வழங்க தயாராக இருப்பதாக அந் நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின்  (Vladimir Putin)தெரிவித்துள்ளார். ஜி-20 மாநாட்டில் காணொலி காட்சி  மூலமாக உரையாற்றியபோதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”கொரோனாவுக்கு 2ஆவது மற்றும் 3ஆவது தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறன. மேலும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி portfolioவை உருவாக்குவதே தங்களின் பொதுவான குறிக்கோள் “ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தான Sputnik V, 92%  குணப்படுத்தும் வகையில் இருப்பதாக கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.