வெள்ளவத்தை உட்பட கொழும்பின் பல பகுதிகளை சேர்ந்த 9 நோயாளிகள் நேற்று மரணம்

231 0

வெள்ளவத்தை உட்பட கொழும்பின் பல பகுதிகளை சேர்ந்த கொரோனா வைரஸ் நோயாளிகள் நேற்று உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் சிலர் தங்கள் வீடுகளில் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளவத்தையை சேர்ந்த 76 வயது நபர் ஒருவர் முல்லேரியா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இதேபோன்று கொழும்பு 13 வயது 69 வயது பெண்ணொருவரும்,கொழும்பு பத்தினை சேர்ந்த 72 வயது ஆணும் தங்கள் வீடுகளில் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு பத்தை சேர்ந்த 48 வயது பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளார்,தெமட்கொடையை சேர்ந்த 89 வயது நபர் ஒருவரும் வீட்டில் உயிரிழந்துள்ளார் இதேவேளை வெல்லம்பிட்டியை சேர்ந்த 65 வயது நபர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

வெல்லம்பிட்டியை சேர்ந்த 76 வயது பெண்ணொருவர் ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை கொழும்பு இரண்டை சேர்ந்த 57 நபர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.