முன்பள்ளி கல்வி குறித்து தேசிய கொள்கை கலந்துரையாடல்

276 0

முன்பள்ளி கல்வி குறித்து தேசிய கொள்கை தொடர் பாகக்  கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமை யில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், நாட்டின் கல்வி முறைமை யில் முன்பள்ளி கல்வியின் முன்னுரிமை மற்றும் நிபுணத்துவத்தை மைய மாகக் கொண்டு ‘முன்பள்ளி கல்வி குறித்த தேசிய கொள் கை’ வகுக்கக் கல்வி அமைச்சர் தலைமையில் நேற்று 19 ஆம் திகதி பல்கலைக்கழக மானிய ஆணையத்தில் சிறப் புக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

 

இதன்போது, ஆரம்பக் கல்வித் துறையில் நிபுணர்களின் ஆலோசனைகளின் படி தற்போது  தயாரிக்கப்பட்டுள்ள வரைவு குறித்து ஆராய்ந்து பார்த்து இறுதி தீர்மானம் எடு க்க  மெதகொட அபயதிஸ்ஸ தேர தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

அதன்படி, குறித்த குழுவின் பரிந்துரைகளுடன் இது தொடர்பாக இறுதி தீர்மானம்  எடுக்கக் கல்வி அமைச் சரின் தலைமையில் 2020/12/11 அன்று இந்த குழு கூட தீர் மானிக்கப்பட்டுள்ளது.