யாழ்.நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்திற்கு கிடைத்த முதல் வெற்றி!

300 0

யாழ். வலிகாமம் வடக்கு காங்கேசந்துறை நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலத்தின் சார்பில் மீள்குடியேற்றத்தின் பின்னர் 5ம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற முதலாவது மாணவன் என்ற சாதனையை மயிலிட்டியைச் சேர்ந்த சா.மதுஷாந்த் படைத்துள்ளார்.

5ம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை-2020 இல் 18 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியை சேர்ந்த சாந்தகுமார் மதுஷாந்த் என்ற மாணவன் 170 மதிப்பெண்களை பெற்று சித்தியடைந்துள்ளார்.

அந்தவகையில் மீள்குடியேற்றத்தின் பின்னர் நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தில் 5ம் தரம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் முதலாவது சித்தியடைவாக இது அமைந்துள்ளதாக பாடசாலை சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மயிலிட்டி பகுதியும் 1990/06/15 அன்று இடப்பெயர்வை சந்தித்து 27 ஆண்டுகளின் பின்னர் 2017 முதல் மீள்குடியேறி வரும் பிரதேசம் என்பதும் குறிப்பிடத்தக்கது