சதயவிழா- தஞ்சை பெரிய கோவிலில் முதல் முறையாக தமிழில் வழிபாடு

344 0

தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதயவிழாவையொட்டி பெருவுடையாருக்கு தமிழில் தேவாரம், திருமுறைப்பாடி வழிபாடு நடந்தது.

தஞ்சை பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா இன்று நடைபெறுகிறது. தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதயவிழாவையொட்டி அவரது சிலைக்கு  கலெக்டர் கோவிந்தராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதை தொடர்ந்து தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு தமிழில் தேவாரம், திருமுறைப்பாடி வழிபாடு நடந்தது.

ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழாவையொட்டி பெருவுடையாருக்கு 48 வகையான அபிஷேகம் நடத்தப்பட்டது.

மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவில் முதல்முறையாக தமிழில் வழிபாடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.