ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு என்ன?

309 0

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்ட பகுதிகளுக்கு நாளைய தினம் பொருட்களைக் கொள் வனவு செய்ய அனுமதிக்க எதிர்பார்த்துள்ளதாக இராணுவ தளபதி முக்கிய அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்ட தொடர்ச்சியாக மூன்று நாட்களாக ஊரடங்கு சட்டம் அமுல் இருந்தமையால் குறித்த பொலிஸ் பிரிவிற்குட்பட்டவர்கள் நாளை 26 ஆம் திகதி திங்கட் கிழ மை அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்ய அனுமதிக்க எதிர்பார்த்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தற்போது, ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளுக்கு எப்போது ஊரடங்கு சட்டம்  நீக்கப் படும் என்பது குறித்த இறுதி தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என சவேந்திர சில்வா தெரிவித் துள்ளார்.