ஊரடங்கு சட்டம் குறித்து இராணுவதளபதி தெரிவித்திருப்பது என்ன?

206 0

கொரோனா வைரஸ் காரணமாக கடும் ஆபத்து நிலவுகின்ற பகுதிகளில் தேவைப்பட்டால் ஊரடங்கினை பிறப்பிப்பதற்கு தயார் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் குறித்து நாளாந்தம் வெளியாகின்ற புள்ளிவிபரங்களை அதிகாரிகள் அவதானித்து வருகின்றனர் என தெரிவித்துள்ள இராணுவதளபதி சவேந்திரசில்வா குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாள நோயாளிகள் காணப்படும் பகுதிகளில் அவசியமென்றால் ஊரடங்கை பிறப்பிப்பதற்கு அரசாஙகம் தயார் என தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகள் பிறப்பிக்கப்படாத பகுதிகளில் காணப்படும் நிலைமையை அவதானித்து வருகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்களையும் அடையாளம் கண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.