2,000 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை

333 0

திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவருடைய மகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாதை அடுத்து திவுலுபிட்டிய மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் மினுவங்கொட தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவருடம் தொடர்புடைய 2,000 பேரிற்கு பிசிஆர் பரிசோதனைகளை இன்றைய தினத்திற்குள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த 69 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.

குறித்த 69 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் சேவையாற்றியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.