எம்.சி.சி உடன்படிக்கை இவ்வளவு தூரம் அரசியல்மயமாக்கப்பட்டது வெட்கக்கேடான விடயம்- அமெரிக்க தூதுவர்

286 0

எம்.சி.சி உடன்படிக்கை இவ்வளவு தூரம் அரசியல்மயமாக்கப்பட்டமை வெட்கக்கேடான விடயம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.
டெய்லி மிரரிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர்இதனை தெரிவித்துள்ளார்.


இலங்கையின் வேண்டுகோளை தொடர்ந்தே அமெரிக்கா எம்.சி.சி உதவிதிட்டத்தை இலங்கைக்கு வழங்க முன்வந்தது என தெரிவித்துள்ள தூதுவர் வறுமையை ஒழிப்பதும் அனைவரையும் உள்வாங்கிய பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் இலக்கை நோக்கமாக கொண்டே இந்த வேண்டுகோளை ஏற்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அபிவிருத்தி முகவர் அமைப்பான எம்.சி.சியின் ஸ்தாபன சாசனம் தெரிவித்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உத்தேச எம்.சி.சி உடன்படிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதா என்பதை தீர்மானிக்கவேண்டியது அரசாங்கமே எனவும் தெரிவித்துள்ள அமெரிக்க தூதுவர் அரசியல் நோக்கமற்று,தரவுகளை அடிப்படையாக கொண்டு கலந்தாய்வு கட்டமைப்புகளை அடிப்படையாகொண்டு அபிவிருத்தி திட்டங்கள் உருவாக்கப்படுவதை கருத்தில் கொள்ளும்போது எம்.சி.சி உடன்படிக்கை மிக அதிகளவிற்கு அரசியல் மயப்படுத்தபட்டுள்ளமை வெட்கக்கேடான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.


உத்தேச 480 மில்லியன் நன்கொடை-(கடனில்லை),போக்குவரத்து நெருக்கடியை குறைத்தல் மூலமும்,வேளாண் பொருட்களை சந்தைக்கு கொண்டுசெல்வதற்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை வழங்குதல் போன்றவற்றின் மூலம் 11 மில்லியன் இலங்கையர்களுக்கு நேரடி நன்மைகளை வழங்குகின்றது எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
பத்திரிகைகளில் நாளாந்தம் வெளியாகும் விடயங்கள் இவை இலங்கை மக்களின் நலன்களுடன் தொடர்புபட்ட விடயங்கள் இவை எனவும் அவர்தெரிவித்துள்ளார்.