சிறுத்தையைக் கொன்று இறைச்சியை விற்கத் தயாரான மூவர் கைது

306 0

சிறுத்தை ஒன்றைக் கொன்று அதன் இறைச்சியை விற்பனை செய்யத் தயாரான போது மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் செப்டெம்பர் 08 இல் நடைபெற்றதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணையில் சிறுத்தை பன்றிகளுக்காக விரிக்கப்பட்ட வலையில் சிக்கியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி சிறுத்தையின் இறைச்சி விற்பனைக்காக இரண்டு பைகளில் அடைக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

தடுத்து வைக்கப்பட்ட சந்தேக நபர்களில் இருவர் கலிகமுவைச் சேர்ந்த திருமணமான தம்பதியர் ஆவர். மற்றையவர் வேரபிட்டியவைச் சேர்ந்தவர்.

காணாமல் போன சிறுத்தையின் உடல் பாகங்கள் மற்றும் சம்பவம் குறித்த விசாரணைகள் எஸ்எஸ்பி ஜகத் சேரமின் நேரடி கண்காணிப்பில் நடந்து வருகின்றன. கைதான சந்தேக நபர்கள் தெல்தெனிய நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.