உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இரு சர்ச்சைக்குரிய விடயங்கள் வெளியாகும்

332 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரிக்கும் ஜனாதிபதி சிறப்பு ஆணையம் முன் பல விடயங்களை வெளியிட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒக்டோபர் 6 ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணையகத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த ஆணையகத்தில் தன் மீது சுமத் தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நிச்சயமாக பதிலளிப்பேன் என்றும் இது தவிர மேலும் பல சர்ச்சைக்குரிய உண்மை களை வெளிப்படுத்துவேன் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னணி உறுப்பினர்களிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், குறித்த ஆணையத்தை சந்தித்து பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்த தான் தயார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிரிகொதாவில் தெரிவித்தார்.